World Tamil Blog Aggregator Thendral: எங்கே போவேன்?

Friday 9 August 2013

எங்கே போவேன்?


இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூலில் 15000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை



அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்
சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுத்தினான்
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்
உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது...


பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்ணும்
குறையுமென்றான்...

நட்புக் கரமொன்று
நண்பனாய் தலைகோதி
தூங்கென்றான்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...

கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்...

அலறி அடித்து
ஓடுகின்றேன்
எங்கே போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றார்

பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ?
பாவிகளின் பாலியல் வன்முறை
எப்போது ஓயுமோ?

2 comments :

  1. பெண்களின் நிலை இதுதானா ?
    சுய விருப்பம் கொண்டு மேல்எழும் பெண்களும் உண்டு ...
    ஆறுதல் அரவணைப்பு ஏதுமின்றி சாதித்த பெண்களும் உண்டு
    உங்கள் கவிதையில் அவர்களையும் சந்திக்க ஆசை.

    ReplyDelete
  2. நிச்சயமாய்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...