World Tamil Blog Aggregator Thendral: செய்வோமா?

Thursday 8 May 2014

செய்வோமா?



இன்று பிளஸ் டூ தேர்வு முடிவு.எத்தனை உயிர்கள் பலி தரப்போகின்றோமோ என்ற கவலையில் ...

தன் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களே தங்களின் ஸ்டேடஸை கூட்டுவதாக நடுத்தர குடும்பங்களின் கவலையிலும் வேண்டுதல்களிலும் இன்றைய பொழுது விடிந்துள்ளது .பல நாட்களாகத் தூங்காது தவிக்கின்றனர் பெற்றோர்களும் ,எவ்ளோ எடுத்தாலும் போதாதென்றே கூறுவார்களே என்ற தவிப்பில் மாணவர்களும்.

இந்த மாய வலையான மதிப்பெண் சுனாமியிலிருந்து விடுபடும் நாள் எப்போது.இயந்திரங்களை உருவாக்கும் கல்வி நோக்கி ஓடாமல் பண்பாடுகளை வளர்க்கும் கல்வியை எப்போது திரும்பி பார்க்கப் போகின்றோம் .நானும் இந்த வலையில் வீழ்ந்தவள் என்பதால் இதன் தாக்கத்தை உணர முடிகின்றது.

ஒரு குழந்தையின் வேண்டுதலாய் இன்று யாரும் போன் செய்து மார்க் எவ்ளோன்னு கேட்காம இருக்க வேண்டுமே என...

உறவினர்கள்,நண்பர்களின் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் தோன்றுவது இயற்கை தான் .ஆனால் அது குழந்தைக்கு எவ்ளோ மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது நாம் அறிந்தோமில்லை

.நிறைய மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளே அறிவாளி என்று மதிப்பிடும் நிலை குழந்தையை மரணத்தை நோக்கித் தள்ளும் பாதை.

முகநூல் நண்பர்கள் இதை மற்றவர்களிடமும் கூறி யாரும் யாரிடமும் மதிப்பெண்கள் பற்றி கேட்க வேண்டாம் எனக் கூறுங்கள்.அவர்களே கூறும் வரை பொறுமை காக்கச் சொல்லுங்கள்.எந்த குழந்தையையும் இன்றைய தேர்வு முடிவு பறிக்காமல் பாதுகாப்பது நம் கடமை.செய்வோமா?

1 comment :

  1. சரியான தருணத்தில் அருமையான விழிப்புணர்வு பதிவு சகோதரியாரே நன்றி
    என் முக நூலில் பகிர்ந்துள்ளேன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...