World Tamil Blog Aggregator Thendral: 31.1.15 tagore school

Sunday 8 February 2015

31.1.15 tagore school

31.01.15 இன்று தாகூர் பள்ளியில் நடனப்போட்டிக்கு நடுவராகச்சென்றிருந்தேன்.மறக்க முடியாத நாளாக இன்று.குழந்தைகள் பாட்டு போட்டதும் உடனே ஆட வேண்டும்..எந்த பாட்டு எந்த குழந்தைக்கு வருமென யாருக்கும் தெரியாது..காலை 10மணி அளவில் போட்டித் துவங்கியது..பாட்டு போட்டதும் உடனே ஆடத்துவங்க வேண்டும்.பாடலுக்கு தகுந்த நடனமாக அமைய வேண்டும் என்பது விதி...

அத்தனை குழந்தைகளும் அருமையாக ஆடினர்...ஒரு குழந்தைக்கு “என்னை விட்டு ஓடிப்போக முடியுமா “என்ற பழைய பாடல் ...அந்த பாடலை அந்தக்குழந்தை கேட்டிருக்கவே வாய்ப்பில்லை..கையை பிசைந்து கொண்டு நின்றுவிட்டாள் .பாவம் அவள் ஆடவே இல்லை...இறுதியில் அவளுக்கு போட்டியின்றி ஆடச்சொல்லி குழந்தையின் கவலையைத்தீர்த்தார் பள்ளியின் நிறுவனர்.

குழந்தைகள் மேடையில் ஆடும்போது கீழே அமர்ந்திருந்த குழந்தைகள் கைதட்டி உற்சாகமாக ஆடுகின்ற குழந்தைகளை ஊக்கமூட்டினார்கள்..நடன அசைவுகளையும் சொல்லித்தந்து ஆடவைத்தனர் ஆச்சர்யமாக இருந்தது ..எப்பேர்பட்ட உயர்ந்த குணத்துடன் குழந்தைகள் பிறக்கின்றார்கள்...போட்டி என்பது திறமைக்காட்டுவதாக இருக்க வேண்டுமே ஒழிய குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைப்பதாக இருக்க கூடாது..என்பதற்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் வெற்றி பெற்ற குழந்தைகளை தோல்வியடைந்தோர் பாராட்டினர்..மிகவும் மகிழ்வாக இருந்தது..

குழந்தைகள் உயரிய குணத்தோடுதான் பிறக்கின்றார்கள்...இவ்வாய்ப்பைத்தந்த பொன்.தங்கராஜ் சாருக்கு மிக்க நன்றி

3 comments :

  1. நடுவருக்கும், குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகள்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...