World Tamil Blog Aggregator Thendral: தமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி

Saturday 11 November 2017

தமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி

தமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி.
என் பங்களிப்பு.ஒரு கவிதையோடு...
மதிப்பிற்குரிய கல்வி செயலாளர் முன்னிலையில் வழங்கிய மறக்க முடியாத தருணம்..

பாடநூல் எதற்காக
கற்பிக்கவோ
வழிகாட்டவோ அல்ல.
குழந்தையின் மனம் திறக்கும்
சாவியது....

சாவியை பட்டென்று நுழைத்து#பாதங்களால்_நிறையும்_வீடு
கடலை வீட்டுக்குள்
நிரப்பின
ஆழி தொட்ட பாதங்கள்.

கடல் மணம் முகர்ந்து
துள்ளியது
கடை மீன்
பாதங்களை நாடி தவழ்ந்தது.

பெரிய பாதங்களை நாடும்
குட்டி பாதங்களென.. விடாதீர்கள்
தொடாமலே வாடிவிடக்கூடிய
அணிச்சமலரணையது.
மென்மையாக புகுத்தி
மெதுவாய் திருப்புங்கள்..
இறுக மூடிய மனக் கதவுகளை
தானாக திறக்க உரைத்திடுமது.

சாவியை தொலைத்து விடாதீர்கள்
சாதனைகளை,சாதனையாளர்களை
சாதிக்க உதவும் ஏணியது.

சாவி அனுப்பும் கேள்வி க்கணைகள்
குத்தி குதறாமல்
மயிலிறகால் வருடி
மனமதைத் திறந்து
முகையை விரித்து
முழுமையாய் மணம் வீசி
மலரவே செய்யட்டும்...
சாவிகளை வார்த்து
சரித்திரம் படைக்க வந்தோரே
சமுதாயம் செதுக்கும்
சிற்பிகளே
சாவிகளை பதமாய்
சமைத்திடுங்கள்
புத்தம் புது உலகு
சத்தமின்றி படைக்கட்டும் அது...

திட்டமிட்டு சிறப்பாக தயாரிப்பு நடக்கிறது.

5 comments :

  1. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. பொருத்தமான அரங்கில் அருமையான கவிதை.

    ReplyDelete
  3. அருமையான பணி. வாழ்த்துகள் !!

    ReplyDelete
  4. பின்னாளில் உங்கள் பணியை வரலாறு பேசும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமை அக்கா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...